என் நெஞ்சின் ஓசையில் நானுணர்ந்தேன்

bookmark

என் இன்ப தேவனில் நான் மகிழ்ந்தேன் (2)
ஊழ்ஊழி காலம் உன் பாதையோரம்
உறவாடும் உயிரின் ஆன்ம தாகம்

1. இருள் சூழ்ந்தப் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும்
இறைவன் துணை எனைத்தொடர என் இதயம் களிகூறும் (2)
என் தலைவன் அவரின் அரணாக
என் இறைவன் அவரின் துணையாக
வாழும் காலம் வசந்தமாகும்

2. வானில் உலா வரும் நிலவாய் வாழ்க்கை என்றும் ஒளிவீசும்
வாய்த் திறந்து வான்வெளியும் வாழ்த்திசைத்து வணங்கிடுமே
என் தலைவன் ...