இறைவா உந்தன் பாதம் வருகின்றேன்

bookmark

என்னையே உனக்காகத் தருகின்றேன் (2)
மலர்களில் விழுந்து மணமென நுழைந்து
காற்றினில் கலந்து கனிவோடு பணிந்து

1. பசி உள்ளோர்க்கு உணவாக நானிருப்பேன்
உடை இல்லாத எளியோர்க்கு உடையளிப்பேன் (2)
விழுந்தவரைத் தூக்கிடுவேன் இங்கு
நலிந்தவரின் துணையிருப்பேன்
இதுவே நான் தரும் காணிக்கையே

2. இருப்பவர் கொடுப்பதில் இன்பமென்ன கையில்
இருப்பதைக் கொடுப்பதே இன்பமென்றாய் (2)
பலியை அல்ல இரக்கத்தையே என்னில்
விரும்புகின்ற இறைமகனே
உன்னைப்போல் நானும் உருவாகிட