இன்றும் என்றும் திருநாளாம் நம் இயேசுவின் பாதத்திலே

bookmark

அடியவர்க்கெல்லாம் பெருவிருந்தாம் அவர் ஆலயப் பீடத்திலே -2

1. மன்னவன் தந்த விருந்தாகும் அவர் மகனுக்குத் திருமணமாம்
மாநிலமெல்லாம் அழைக்கின்றார் அது மாறாத பேரின்பமாம்
மாறாத பேரின்பமாம் அது மாறாத பேரின்பமாம்
மாநிலமெல்லாம் அழைக்கின்றார் அது மாறாத பேரின்பமாம்

2. கொடியில் கிளைகள் சேர்ந்திருந்தால் அவை
கோடியாய் பலன் தருமாம்
இயேசுவில் நானும் இணைந்திருந்தால் என்றும்
இல்லாத பேரின்பமாம்
இல்லாத பேரின்பமாம் என்றும் இல்லாத பேரின்பமாம்
இயேசுவில் நானும் இணைந்திருந்தால்
என்றும் இல்லாத பேரின்பமாம்