நகர் நீங்கு படலம் - 1881
1881.
‘முழுவதே பிறந்து உலகு உடைய மொய்ம்பினோன்,
“உழுவை சேர் கானகத்து உறைவென் யான்” என,
எழுவதே? எழுதல் கண்டு இருப்பதே? இருந்து,
அழுவதே? அழகிது இவ் அன்பு!’ என்றார் - சிலர்.
சிலர் -; பிறந்து உலகு முழுவதே உடைய மொய்ம்பினோன் -
மூத்தவனாகப் பிறந்துஉலகம் முழுவதையும் தனக்கு உடைமையாகப்
பெற்ற வலிமை உடைய இராமன்; ‘உழுவை சேர்கானகத்து உறைவெற்
யான்’ என எழுவதே? - புலி உள்ள காட்டில் தங்குவேன் யான் என்று
சொல்லிப் புறப்படுவதா; எழுதல் கண்டு இருப்பதே? - அவன்
புறப்படுவதைப் பார்த்தும்(உடன் செல்லாமல்) நாம் இங்கு சும்மா இருப்பதா;
இருந்து அழுவதே?-; இவ் அன்பு அழகிதே?- (நாம் இவனிடத்தில்
வைத்த அன்பு அழகாயிருந்தது;’ என்றார்-.
‘எழுவதே? எழுதல் கண்டு இருப்பதே? இருந்து அழுவதே?’ இவ்
வடியில் ஒரு சொல்லை இன்னொருசொல் பற்றித் தொடர்ந்து வந்துள்ள
அழகு காண்க. ‘ஒற்றைச் சர மாலை யணி’ என இதனைக்கூறுவர்;
வடமொழியில்‘ஏகாவளி எனப்பெறும். 186
