நகர் நீங்கு படலம் - 1865
1865.
கரும்பு அன மொழியினர், கண் பனிக்கிலர்,-
வரம்பு அறு துயரினால் மயங்கியேகொலாம்.
இரும்பு அன மனத்தினர் என்ன நின்றனர்!-
பெரும் பொருள் இழந்தவர் போலும் பெற்றியார்.
கரும்பு அன மொழியினர் - கரும்பு போன்ற பேச்சினை உடைய
மகளிர்; கண்பனிக்கிலர் - கண்ணீர் அரும்பாதவராய்; பெரும் பொருள்
இழந்தவர் போலும்பெற்றியர் - பெரிய செல்வத்தை இழந்து
விட்டவர்களது தன்மையை உடையவராகி; இரும்புஅளமனத்தினர்
என்ன நின்றனர் - இரும்பை ஒத்த மனம் உடையவர் என்று கண்டோர்
சொல்லும்படி நின்றார்கள்; வரம்பு அறு துயரினால் மயங்கியே கொல் -
(இவ்வாறுஆனது) அளவற்ற துன்பத்தால் திகைத்ததாலோ?
பெருந்துன்பத்தில் மனம் இறுகிப் போதல் உலகியல்; அவ்வாறு
ஒருசிலர் இருந்தனர், ‘ஆம்’ அசை. 170
