இயற்கையில் உறைந்திடும் இணையற்ற இறைவா

bookmark

என் இதயத்தில் எழுந்திட வா
என்றும் இங்கு என்னோடு நின்று என்னை அன்போடு
காத்திடு என் தலைவா (2)

1. உந்தன் அன்பு உறவின்றி எனக்கு இங்கு
சொந்தம் சுற்றம் சூழ்ந்திட பயன் என்னவோ (2)
மெழுகாகினேன் திரியாக வா மலராகினேன் மணமாக வா (2)

2. உருவில்லா இறைவன் உன் உதவியின்றி
உலகத்தில் எதுவும் நடந்திடுதோ (2)
குயிலாகினேன் குரலாக வா மயிலாகினேன் நடமாட வா (2)