இதோ ஆண்டவரின் அடிமை

bookmark

ஆகட்டும் இறைவா உம் திருவுளப்படியே (2)

1. என் ஆன்மா ஆண்டவரை ஏத்திப் போற்றுகின்றது
என் மீட்பர் இறைவனிலே என் மனம் மகிழ்கின்றது
என் மனம் மகிழ்கின்றது என் மனம் மகிழ்கின்றது

2. ஏனெனில் ஆண்டவர் என் தாழ்நிலையைக் கண்ணோக்கினார்
இன்று முதல் என்றும் எனைப் பேறுடையாள் என்பரே
பேறுடையாள் என்பரே பேறுடையாள் என்பரே